ஜேர்மனியில் பாலியல் விளையாட்டின்போது காதலி உயிரிழந்துள்ளதால், காதலனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியின் Mannheim நகரத்தை சேர்ந்த் அந்த ஜோடியினர், அடிக்கடி தனிமையில் சந்தித்து உடலுறவு கொள்வர். அப்படி உடலுறவின் போது, பாலியல் பொம்மைகள், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு யூலை மாதம் சம்பவம் நடைபெற்ற போது எதிர்பாரதவிதமாக இவர்களது பாலியல் விளையாட்டால் காதலி உயிரிழந்துள்ளார்.
இதனால் கைது செய்யப்பட்ட காதலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவம் நடைபெற்ற அன்று நாங்கள் இருவரும் எங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது எங்களிடம் பாலியல் பொம்மை இல்லாததால், சமையலறையில் இருந்த வெள்ளரிக்காயில் ஒரு துண்டை வெட்டிஎடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன்.
அதனை அருகில் வைத்துக்கொண்டு அவள் மது அருந்திக்கொண்டிருக்கையில், சமையலறையில் இருந்து தீப்பற்றி எரிகிற வாசனை வந்தது, அதனைத்தொடர்ந்து சமையலறை சென்று பார்க்கையில், நாய்க்கு கொடுப்பதற்காக அடுப்பின் மீது வைத்திருந்த மாமிசம் தீப்பிடித்து எரிந்திருந்தது.
இந்த இடைப்பட்ட நேரத்தில், வெள்ளரிக்காய் அவளது தொண்டையில் சிக்கி அவளால் மூச்சு எடுக்கமுடியாமல் திணறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், சுயநினைவற்று இருந்த அவள் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார் என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட நீதிபதி, பிரதிவாதி அலட்சியமாக நடந்துகொண்டதால், காதலியின் மரணம் நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தற்போது, மேலும் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், இவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.