சென்னை: ‘கத்தி’ பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்.
சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது.
எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் ‘கத்தி’ திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும் (அம்மாவுக்கு ஏன் நன்றி சொல்கிறார்?), தமிழக காவல்துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் என தீபாவளி வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
‘கத்தி’ படத்திற்கான பிரச்னை தீர்ந்ததால், நாளை தீபாவளியன்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.
21-10-2014
இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் போஸ்டர்கள் கேரள ரயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
கேரளாவில் ஓடும் ரயில்களில் தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டும் பழக்கம் இல்லை. இந்நிலையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்தின் போஸ்டர்களை ரயில்களில் ஒட்டியுள்ளனர் சேட்டன்கள். கேரள ரயில்களில் விஜய்யின் கத்தி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்களை ஒட்டும் கேரள மாநிலத்தவர்கள்.
தமிழகத்தை போன்றே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இந்நிலையில் ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.
– See more at: http://www.thinakkural.lk/article.php?cinema/vqfswq8moy3866a9df2255ad13479orqln642b923d95503b9a7958d8ngnfd#sthash.y3HPl9gW.dpuf
இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
கேரளாவில் ஓடும் ரயில்களில் தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டும் பழக்கம் இல்லை. இந்நிலையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்தின் போஸ்டர்களை ரயில்களில் ஒட்டியுள்ளனர் சேட்டன்கள்.
கேரள ரயில்களில் விஜய்யின் கத்தி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்களை ஒட்டும் கேரள மாநிலத்தவர்கள்.
தமிழகத்தை போன்றே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இந்நிலையில் ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.
VIDEO: கத்தி முன்னோட்டத்தால் கதி கலங்கிப் போயிருக்கும் தல இரசிகர்கள்!
கத்தி படத்தின் முன்னோட்டம் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை செம்ம விருந்து தான்.இளைய தளபதியின் கவர்ச்சியான நடையில் முன்னோட்டம் அட்டகாசமாக வந்துள்ளது.
இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே 1 லட்சம் பேர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த முன்னோட்டத்தை 8.15 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்ட சாதனை படைத்துள்ளது.
முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததால், படத்திற்கு தற்போது முன்பை விட பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.