இருபத்தையாயிரம் அமெரிக்க டொலர்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில், நேற்று (5) மாலை சென்னையில் இருந்து இலங்கை வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த நபர் (41) போலியான கையுறை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.
அவரது நடவடிக்கையில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் தோன்றவே அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் வசமிருந்த சுமார் ஒன்றேகால் இலட்ச ரூபா மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.
அவரது கையுறையைச் சோதனையிட்டபோதே, அதனுள் அவர் இலங்கை மதிப்பில் சுமார் 39 இலட்ச ரூபா மதிப்பிலான அமெரிக்க டொலர்களைக் கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது.