யாழ்ப்ப்பாணம் திருநெல்வேலி கலட்டி சந்தியில் இளைஞர் மீது வாள்வெட்டு, விரல் துண்டிக்கப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் யாழ்.
போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கலட்டிப் பகுதியில் வேலைக்காக வந்த குறித்த இளைஞரை இன்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் பொது மக்களினால் யாழ்;.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வாள் வெட்டுச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நின்ற மக்கள் சிதறி ஓடியதாகத் தெரியவருகின்றது.