பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
பிரேசிலின் பீரங்கிப்படையில் இருந்து ஆப்பிரக்காவில் போரிட்ட எர்மான்தோ பிவெட்டா, இத்தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது பலரும் இசைக்கருவிகள் இசைத்து, கைத்தட்டி ஆரவாரம் எழுப்பினர்.