கொரோனா தொற்று பாதிப்பால் இறப்பவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று ஆக்ஸ்பாம் எச்சரித்துள்ளது.
கொரோனாவால் இந்த ஆண்டின் இறுதிக்குள் பசியினால் ஒரு நாளைக்கு 12,000 பேர் இறக்கக்கூடும் என்று ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெகுஜன வேலையின்மை, உணவு உற்பத்தியாளர்கள் ஊரடங்கை எதிர்கொள்வது மற்றும் உதவி விநியோகிப்பதில் சிரமங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் பசி அதிகரிக்கும் என்று தொண்டு நிறுவனம் கூறுகிறது.
ஆக்ஸ்பானம் தொண்டு நிறுவனத்தின் அறிக்கை பசியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது.
அவை ஏமன், டி.ஆர். காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, மேற்கு ஆப்பிரிக்க சஹேல், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, சூடான் மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகள் ஆகும்.