நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, பொது மக்களின் நலன் கருதி விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் குறித்த ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின், வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் அழைப்பை ஏற்படுத்தி தகவலை வழங்குமாறு, கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஊரடங்கு அமுலில் உள்ள வேளைகளில் இவ்வாறு கொரோளா நோய் அறிகுறிகள் தொன்படுமாயின் 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு குறித்த, செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.