நாட்டில் இன்று புதன்கிழமை 748 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 59,922 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 51,046 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 8,588 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியது. அதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்வடைந்துள்ளது.
ராகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.