கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒழுங்கையைச் சேர்ந்த 23 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
செரோன் செல்வராஜா எனும் யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இச்சம்பவம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டில் தூக்கிட்டே இந்த யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த யுவதி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தைக் கண்டறிய கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருமண விவகாரம் ஒன்று உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த விசாரணைகளில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் உண்மைக் காரணத்தைக் கண்டறிய தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.