நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் முக்கால்வாசி பகுதியை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் மீதமான ஒரு பகுதியையே மாத்திரமே மஹிந்த ராஜபக்ஸ முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட யுத்த தளபாடங்களைக் கொண்டே யுத்தத்தை இலகுவாக வெற்றிக்கொண்டதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய 6 தாக்குதல் விமானங்களை கொண்டு வந்ததாகவும், குறித்த 6 விமானங்களும் அழிவடைந்து விட்டதாகவும், அவை அனைத்தும் அதிகம் பணம் கொடுத்து பெறப்பட்டதென சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய அதிக நிதி செலவில் தருவிக்கப்பட்ட விமானங்களின் பங்கு பணங்களை கோத்தபாய வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.