இலங்கை சிவப்பு அபாய மண்டலத்திலிருந்து பசுமை மண்டலத்துக்குள் நுழைந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளரும் கோவிட் – 19 ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனாவை கணிசமாக கட்டுப்படுத்திய நாடுகள் பசுமை மண்டலத்துக்குள் சேர்க்கப்படும் என்று, அவர் கூறினார்.
மக்கள் கவனமாக இல்லாவிட்டால், மீண்டும் சிவப்பு மண்டலத்துக்குள் நுழைய வேண்டி வரும். எனவே, பசுமை மண்டலத்தை பாதுகாப்பது மக்களின் கடமை என்றும், அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகளால் இலங்கையை மீண்டும் பசுமை மண்டலத்தில் அனுமதித்துள்ளதாகவும் தினசரி அறிக்கையிடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவர் கூறினார்.