யாழ்ப்பாணத்தில் மன்மதன் அம்பினால் பாதிக்கப்பட்டு பலா் உயிர்துறக்கும் அவலம் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
பருவம் தப்பிப் பெய்கின்ற மழை போல் வயதானவா்களும், சிறுவா்களும் காதல் மழையால் தோய்ந்து வெந்து வெதும்பிப் போவதைப் பார்க்கையில் காதல் எவ்வளவு வேலையைச் செய்கின்றது என அதிசயிக்கலாம்.
கடந்த ஒருசில வாரத்திற்கு முதல் கௌரி விரதம் இருந்து காப்புக் கட்டிய யுவதி நேற்று முன்தினம் தனது காதலனுடன் ஓடிவிட்டார் என்று ஒரு நண்பா் தெரிவித்தார்.
இதில் என்ன விசேடம் இருக்கின்றது என கேட்டபோது கௌரிவிரதம் இருந்த பெண் யேசு பிரானை வணங்குபவருடன் ஓடிவிட்டதாகச் சொன்ன போதே காதலின் அதிசயம் தெரிந்தது.
கௌரி விரதம் இருந்த பெண்ணை அந்த கொளி அம்மனே காதலில் இணைத்துள்ளதா ? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்குள் காதல் தோல்வி காரணமாக யாழில் பலா் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
காதல் என்பதற்கு எத்தனையோ வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மையில் காதல் என்பது ஓமோன் சுரப்பினால் உருவாவதாகவே விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனா்.
காதல் என்பது ஒரு பருவ வேட்கை எனவும் பனி காலம் வந்தால் நாய்கள் என்ன செய்யுமோ அது போல்தான் மனிதனின் காதலும் பட்டிமன்றம் ஒன்றில் கவிஞா் ஒருவா் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது காதலாககிக் கசிந்து கண்ணீா் மல்குவதற்குப் பதிலாக காதலாகிக் கிஸ் பண்ணிக் கா்ப்பமாக்கின்ற வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாய்க்குக் காதல் வந்தால் அதனை நீங்கள் கட்டி வைத்தாலும் அதன் காதல் வேட்கையைக் குறைக்க முடியாது. நாய் வளா்த்து அனுபவமுள்ளவா்கள் அறிந்திருப்பார்கள்.
எவ்வளவு பாதுகாப்பாக மதில் கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஒழுங்கைக்குள் தனது காதல் இணையுடன் இழுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பீா்கள்.
எந்தப் பெரிய மதில் தடையையும் அந்த நாய் இலகுவில் பாய்ந்து வெளியே வந்திருக்கும் . காதல் என்பது பருவ வேட்கையால் வருவது என வரைவிலக்கணப்படுத்தினால் கள்ளக் காதல் என்பது எதனால் வருவது என வரைவிலக்கணம் கூறமுடியுமா?
பொதுவாகக் கள்ளக்காதலுக்கு வரைவிலக்கணம் கூறுவது கடினம் என்றாலும் கள்ளக்காதலில் ஈடுபடுபவா்களில் யாராவ ஒருவர் சட்டரீதியாக தாம்பத்திய சுகம் கண்டவராக இருப்பார்கள்.
அதாவது திருமணம் என்னும் ஒரு சடங்கைச் செய்து அதன் மூலம் காதல் வேட்கையைத் தீா்த்த ஒருவராக இருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட காதலில் ஈடுபடுபவா்கள் தம்மை மற்றவா்களுக்கு இனங்காட்டாமலே ஈடுபடுவா்.
இவ்வாறு தான் கள்ளக் காதலுக்கு வரைவிலக்கணம் சொல்லலாம். இந்த வரைவிலக்கணத்தை வைத்து நல்ல காதலை பார்த்தால் காதல் என்பதில் காமம்தான் அதிகமாக இருப்பது தெரியவரும்.
யாழ்ப்பாணத்தில் தற்போது இந்தக் கள்ளக் காதல்கள் தான் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் பிஞ்சில பழுத்த காதலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
16 வயதுச் சிறுவனும் காதலிக்காக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் 73 வயதுக் கிழவனும் கள்ளக் காதல்காரணமாக தற்கொலை செய்யும் சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதைவிட கொலைகளும் இடம்பெற்றுள்ளன. தனது மனைவியின் சகோதரியை அடைவதற்காக மூன்று கொலை செய்த புண்ணியவானும் யாழ்ப்பாணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகமெங்கும் இந்த பருவ வேட்கைச் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் யாழ்ப்பாணத்தில் அது நடைபெறும் போது அதிசயமாக அனைத்துத் தரப்பாலும் பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பது வேடிக்கையான ஒன்றாகவே இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் காதலில் ஈடுபடுபவா்களும் , கள்ளக்காதலில் ஈடுபடுபவா்களும் தாராளமாக தங்களின் நடவடிக்கையைத் தொடா்ந்து கொண்டிருக்கலாம்.
ஆனால் எமக்கு உங்களைப் பற்றித் தகவல்கள் வந்தால் நிச்சயம் பிரசுரிப்போம்.
ஏனெனில் இப்போ வாசித்துக் கொண்டிருக்கும் வாசகா்களாகிய நீங்கள் இவ்வாறான செய்திகளைத்தானே அதிகம் பார்க்கின்றீா்கள்.!!!
கள்ளன் என்றால் யார் எனக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீா்கள்? களவெடுப்பன் கள்ளன் என சொல்வீா்களா? இல்லை களவெடுத்துப் பிடிபடுபவன் கள்ளன் எனச் சொல்வீா்களா?
ஆகவே தாரளமாகக் களவெடுங்கள். ஆனால் பிடிபடாதீா்கள்!! ஏனெனில் காதல், கள்ளக் காதலில் ஈடுபடும் நீங்கள் அனைவரும் ஆரோக்கியமானவா்களாக இருக்கின்றீா்கள் என்பதற்கு இந்தக் கலவிதான் மன்னிக்கவும் காதல்தான் முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
நன்றி
யாழ் சமூகப் பிராணி