இந் நிலையில் இறந்தவரின் உடலை, அவரது மனைவி வைத்தியசாலையிலிருந்து மின்மயானத்திற்கு தனியார் அம்புலன்ஸின் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது மின்மயானம் அருகே வைத்து வாடகையாக 10,000 ரூபாவை கொடுக்க வேண்டுமென சாரதி கேட்டுள்ளார்.
எனினும், தன்னிடம் 3000 ரூபா மாத்திரமே தற்போது இருப்பதாகவும், மீதி பணத்தை பின்னர் கொடுப்பதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாரதி, உடலை மயானம் அருகேயுள்ள நடைபாதையில் வைத்துவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது,
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.