ராஜஸ்தானத்தின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்த குல்தாரா திடீரென ஒரே இரவில் ஆளில்லா கிராமமாக மாறியுள்ளது.
குல்தாரா கிராமவாசிகள் திடீரென ஒரு நாள் அனைவரும் குல்தாரா கிராமத்தை மொத்தமாக காலிசெய்துவிட்டு சென்றுள்ளனர்.
எதனால் அப்படி செய்தார்கள், எது அவர்களை அப்படி செய்ய வைத்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே விளங்குகிறது.
சுமார் 1500 மக்கள் தொகையாக கொண்ட இந்த குல்தாரா கிராமத்தில் என்ன நிகழ்ந்தது யாரால் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த கிராமத்தினை காலி செய்தனர் என்ற கேள்விக்கு இன்றுவரை எந்த பதிலும் இல்லை.
ஆனால் சிலர் யாரோ விட்ட சாபத்தினால் தான் இந்த கிராமம் இந்த கதியானதாக கூறப்படுகிறது.
இன்று சுற்றுலா தளமாக விளங்கும் இந்த கிராமத்தில் காலை முதல் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னர் வரையே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டெல்லியை சேர்ந்த 30 நபர்கள், அந்த தடைசெய்யப்பட்ட கிராமத்தில் இரவு வேளையில் தங்கியுள்ளனர்.
அப்போது அவர்கள் அங்கே மர்ம நிழல்களை கண்டதாகவும், அமானுஷ்ய குரல்களை கேட்டதாகவும், யாரோ தங்களை தொடுவது போல உணர்ந்ததாகவும் ஆனால் யாருமே அங்கே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.