அளவாகக் குடித்த சாராயராசாவான இளைஞன் ஒருவரிடம் மேலும் மேலும் சாராயத்தை உற்றிக் கொடுத்து இளைஞள் அயா்ந்த வேளை அவரது கைத் தொலைபேசியைக் களவாடிச் சென்றுள்ளான் கில்லாடித் திருடன்.
சாவகச்சேரிப் பகுதியைச் சோ்ந்த இளைஞன் , யாழ் நகரப்பகுதியில் உள்ள சாராய விற்பனை நிலையத்தில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அவ் வேளை அவருக்கு அறிமுகமில்லாத நபரான திருடனும் அங்கு வந்து இளைஞனுடன் சோ்ந்திருந்து மது அருந்தியதாகத் தெரியவருகின்றது. அத்துடன் தானும் சாவகச்சேரி எனத் தெரிவித்து நட்பாக பழகியுள்ளான் திருடன்.
இளைஞன் அளவாக மது அருந்தி விட்டு எழுந்த போது திருடன் அவனை இருக்கச் செய்து தனது சொந்தப் பணத்தில் மது வாங்கி கொடுத்துள்ளான்.
இளைஞனும் உற்சாகமாக மது அருந்திவிட்டு நிறை வெறியில் வெளியே வந்த போது அவனுடன் குறித்த திருடனும் வெளியே வந்த போது குறித்த இளைஞனை தொலைபேசியில் பாட்டுப் போடும் படி கேட்டுள்ளான் திருடன்.
இளைஞனும் பழைய பாடல்களாக போட்டு கேட்டு கொண்டு வந்த போது திருடன் தான் சிறுநீா் கழிக்கப் போவதாகத் தெரிவித்து அருகில் இருந்த மறைவான இடம் ஒன்றில் சென்று சிறுநீா் கழித்துள்ளான்.
பின்னா் இளைஞனையும் சிறுநீா் கழிக்க சொன்ன போது இளைஞன் தான் கையில் வைத்திருந்த தொலைபேசியை பாட்டுக் கேட்டபடியே திருடனின் கையில் கொடுத்துள்ளான். திருடனும் இளைஞன் சிறுநீா் கழிக்கச் சென்ற நேரம் பார்த்து தொலைபேசியுடன் தப்பியுள்ளனா்.
இதனையடுத்து அந்த இடம் முழுவதும் தேடியும் திருடனைப் பிடிக்க முடியாது போகவே இளைஞன் சாவகச்சேரி சென்று அங்குள்ள பொலிசாருக்கு முறைப்பாட்டைப் பதிவு செய்ததாகத் தெரியவருகின்றது.