கனடாவில் சிறிய வீடொன்றுக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்த 300 பூனைகள் மீட்கப்பட்டுள்ளன.டொரண்டோவிவிலுள்ள வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த இப்பூனைகள் மந்தபோஷாக்குடனும் தாகமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அயலவர்களின் தகவலையடுத்து, “டொரண்டோ பூனை மீட்பு” குழுவினர் மேற்படி வீட்டுக்குச் சென்றனர். அங்கு சுமார் 70 பூனைகள் இருக்கலாம் என தாம் கருதியதாக ஆனால், சுமார் 300 பூனைகள் இருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.