16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது நபர் ஒருவருக்கு இந்தியாவில் ஆணுறுப்பை அறுத்து பொதுமக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். இதனால்அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயதுசுரேஷ்குமார் என்பவர் தனது வீட்டின் அருகேயுள்ள 16 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்தபகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். சட்டத்தை தங்கள் கையில்எடுத்துக்கொண்டு அந்த நபரை பொதுமக்கள் சுமார் ஒரு மணிநேரமாக கட்டி வைத்துஅடித்துள்ளனர்.
உடல்முழுவதும் ரத்த வெள்ளத்தில் சுரேஷ்குமார் மிதந்தபோதும் பொதுமக்களின்ஆத்திரம் தீரவில்லை. மேலும் ஒரு சிலர் சுரேஷ்குமார் ஆணுறுப்பை கத்தியால்துண்டாக வெட்டி தரையில் எறிந்தனர்.
இதனால் அலறி துடித்தபடி சுரேஷ்குமார் மயக்கமானார். தற்போது அவர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில்சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சுரேஷ்குமாரால் பலாத்காரத்திற்குட்பட்ட சிறுமி இன்னும் அதிர்ச்சியில்இருப்பதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
அரை நிர்வாண கோலத்தில் ஷாருக் மகன் – அமிதாப் பேத்தி படம் (வீடியோ)
13-10-2014
சமீபகாலமாக இணைய தளங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆபாசமான புகைப்படங்களில் நடிகைகளின் தலையை மார்பிங் செய்து குறிப்பிட்ட நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததாக தகவல் பரப்பப்படுகிறது.
அதுபற்றி அந்தந்த நடிகைகள் மறுப்பு வெளியிடுவதுடன், போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.
அந்த வரிசையில் பாலிவுட்டை திடுக்கிட வைத்திருக்கிறது சமீபத்தில் வெளியான ஆபாச படம். படுக்கையில் நிர்வாண கோலத்தில் வாலிபனும், அரைநிர்வாண கோலத்தில் இளம்பெண்ணும் இருப்பதுபோல் அதில் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் இடம்பெற்றிருக் கும் வாலிபன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் என்றும், இளம்பெண் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நாவெல் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் சில இணைய தளங்களில் ஷாருக், அமிதாப் மகன், பேத்தி சாயலில் உள்ளவர்களை வைத்து விஷமத்தனமாக இதுபோல் தகவல் பரப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இந்த படம் மொபைல் போனில் செல்பி பாணியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.