பீகார் மாநிலத்தில் சிறுவர் காப்பகம் ஒன்றில் 34 பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளனர் என புதிய வைத்திய பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.
பீகாரின் முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுவர் காப்பகத்தில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி கல்வி கற்று வருகிறார்கள்.
குறித்த காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காப்பகத்தில் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்த போது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுக்கு நடந்த கொடுமையை விளக்கியுள்ளார்கள். காப்பகத்தில் தங்கியிருக்கும் 20க்கும் மேற்பட்ட சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பல நேரங்களில் பலாத்காரம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் பொலிஸார் தோண்டியுள்ளார்கள் இருப்பினும் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸார் காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என குற்றவாளிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முஷாபர் நகரில் காப்பகம் மூடப்பட்டு பிற மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு சிறுமிகள் மாற்றப்பட்டனர்.
இங்கிருக்கும் 40 சிறுமிகளிடம் வைத்திய பரிசோதனை நடத்தியதில் 34 பேர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.