சீனாவில் மழைவெள்ளத்தினால் ஏற்பட்ட மண்சரிவு தனது வீட்டை தாக்கியவேளை தனது குழந்தையை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி எறிந்த தாய் பின்னர் உயிரிழந்துள்ளார்.
24 மணிநேரத்தின் பின்னர் பெண் குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிற்குள் இருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சீனாவின் ஹெனானன் மாநிலத்தில் உள்ள வங்சொங்டியான கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை பெண் குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் மீட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இரண்டு அல்லது மூன்றுமாத குழந்தையே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான் குழந்தையொன்றின் அழுகுரலை கேட்டேன் அவ்வேளை அந்த இடத்திற்கு மீட்புபணியாளர்களும் வந்திருந்தனர்.
அவர்கள் குழந்தையை மீட்டனர் என தெரிவித்துள்ள குடும்ப உறுப்பினர் அந்த குழந்தையை தாய் உயரமான இடத்திற்கு தூக்கி எறிந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை தாயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் ஏதோ ஒன்றை தூக்கும் வேளை உறைந்துபோனவர் போல காணப்பட்டார் என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள் சரியான தருணத்தில் குழந்தையை அவர் தூக்கி எறிந்துள்ளார் அதன் காரணமாகவே அந்த குழந்தை உயிருடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.