லக்னோ: முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியதால் பெரும் சர்ச்சை உள்ளாகி இருக்கும் வேளையில், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதால் அடுத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பாரபாங்கி மாவட்டத்தில் உள்ள ஆம்தாபூர் சுங்கச்சாவடியில் காலை 11 மணியளவில் தவறான தடத்திற்குள் நுழைந்த கோசைன்காஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ அபய் சிங்கின் காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது எம்.எல்.ஏவை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் ஆத்திரத்துடன் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து மேலும் மூன்று கார்களில் வந்த எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் ஊழியர்களை தாக்க தொடங்கினர்.
தாக்குதலுக்குள்ளான சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவத்தை அபய் சிங், காரில் இருந்து பார்த்து கொண்டிருந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.
On Camera, Villagers Beaten Mercilessly As ‘Lesson’ For Being Informers
A chilling video has emerged of villagers being beaten brutally in Meghalaya by suspected militants who allegedly wanted to make an example out of “informers”. (Disturbing images, not suitable for children)
-Video uploaded on September 12, 2014