கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் – பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போதே கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள், பிரதேச மக்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பட்ட தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷனின் இருவரினதும் சடலங்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு அமைய அவர்களது வீடுகளில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனின் பூதவுடல் அவரது சொந்த இடமான கிளிநொச்சியிலுள்ள 155 ஆம் கட்டையில் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியான கஜனின் பூதவுடலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், மாணவர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும் கருப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதுமன்,உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.