சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் சீகிரியவை பார்வையிடுவதற்காக வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த முறையை வெற்றியடைய செய்து உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் புதிய சுற்றுலா அனுபவமாக மாற்றப்பட்டுள்ளது.
சீகிரியா வரும் சுற்றுலா பயணிகளை சுமார் இரண்டு கிலோமீற்றர் வரை மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
சீகிரிய கற்களுக்கு நடுவில் பயணித்து அங்கிருக்கும் ஏரியில் படகு ஊடாக கிராமம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு கிராமபுறத்தில் உள்ள முறைக்கமைய காலை உணவு வழங்கப்படுகின்றது.
தற்போது சீகிரியவை பார்வையிட வரும் பல சுற்றுலா பயணிகளுக்கு இது சிறந்த அனுபவமாக மாறியுள்ளது. அந்த பகுதிகளில் நன்கு சமைக்க தெரிந்த பெண்கள் இதன் ஊடாக பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வருமானம் கிடைக்கும் தொழிலாக மாறியுள்ளது.
இந்த சுற்றுலா முறை தற்போது ஹபரண, தம்புள்ளை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.