சுவாதியை போல் உன்னையும் கொலை செய்து விடுவேன் என சாமுவேல் மிரட்டியதாக மேலும் ஒரு பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி ஆபாச புகைப்படங்கள் மூலம் மிரட்டியவர் சாமுவேல். பொறியியல் பட்டதாரியான இவர் பல பெண்களை பேஸ்புக் மூலம் பழகி ஆபாச படங்களை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த கன்யா என்ற இளம்பெண்ணின் தாயார் கடந்த 25 ஆம் திகதி இரவு சிந்தாதிரிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்தார். அதைத் தொடர்ந்துபொலிசார் சாமுவேல்சை கைது செய்து விசாரண நடத்தி வந்தனர். அதில் சில திடுக்கிடும் தகவல்களை சாமுவேல் தெரிவித்தார்.
தற்போது சாமுவேல் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொலிசில் மேலும் ஒரு புகாரை அளித்துள்ளார்.
அதில், சாமுவேல் தன்னை காதலித்ததாகவும், அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்றோம். அப்போது தங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது.
மேலும் தனக்கு திடீரென்று ஒரு நாள் போன் வந்ததாகவும், செல்போனில் பேசிய பெண் ஒருவர், சாமுவேலை நம்பாதே. அவனால் ஏற்கனவே நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறி போனை துண்டித்துவிட்டதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சாமுவேலின் போனை எடுத்துப் பார்த்தேன். அதில் பல பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் இருந்தன.
மனமுடைந்த நான் அவரிடம் பழகுவதை நிறுத்திக்கொண்டேன். தான் நிராகரித்ததால் ஆத்திரமடைந்த சாமுவேல் என்னை போனில் மிரட்டத் தொடங்கினான்.
10 லட்சம் ரூபாய் கேட்டான். பணத்தை தரவில்லை என்றால் சுவாதியைப் போல கொலை செய்துவிடுவதாக மிரட்டினான் என பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.