சுவிட்சர்லாந்து Lausanne VD நகரத்தில் உள்ள St. Francois நகரில் மது விடுதியில் நிகழ்ந்த தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் 25 வயதான கினியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மதுக்கடைக்கு சென்றுள்ளார்.
மது அருந்திவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் சிறிது நேரம் உரையாடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நபர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள 28 வயதான நபர் மது பாட்டிலை உடைத்து கினியாவை சேர்ந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நபர் உயிருக்கு போராடியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி நபர் பரிதாபமாக பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சோமாலியா நாட்டை சேர்ந்த அந்த 28 வயதான நபரை கைது செய்தனர். இருவரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால், தாக்குதலுக்கு என்ன காரணம் என இதுவரை தெரியவரவில்லை.
அதிகாலை நேரத்தில் மதுவிடுதியில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.