இந்த ரயிலின் எஸ்3 மற்றும் எஸ்5 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் இரு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.
ஒருவர் பலி:
சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு:
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு அறிவிப்பு:
குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட கவுகாத்தி ரயில்:
சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கவுகாத்தி விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. பலத்த பாதுகாப்புடன் குண்டுவெடிப்பு நிகர்ந்த விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.
மக்கள் பீதியடைய வேண்டாம்:
சென்ட்ரல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சுவாதி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 14 பேரும் விரைந்து குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஒருவர் கைது:
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முகமது பாசில் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பிரபல மருந்து கடை ஒன்றில் காசாளராக வேலை செய்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பாசில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயிலில் கழிவறை ஒன்றில் ஒளிந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.