ரயில் பாதை அருகே இருந்து செல்பி எடுத்துக்கொண்டிருந்த மாணவியொருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். சீனாவின் பொசான் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்மாணவி ரயிலில் மோதும் காட்சியின் காணொளி மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன. பலரின் எச்சரிக்கையையும் மீறி ரயில் பாதையின் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.