ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு உள்ளிட்ட நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்திருந்த இந்த கருத்துக் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்பொழுது அரசியல் பழிவாங்கள் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, அரசியல் பழிவாங்கள்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னின்று நடவடிக்கை எடுப்பாராயின் அவருடன் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பக்க பலமாக இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.