மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் பல சந்தேகங்கள் எழுந்து கொண்டே உள்ளது.
அவர் இயற்கையாக மரணித்தாரா அல்லது மரணிக்க வைக்கப்பட்டாரா என பலர் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
அவர் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவருக்கு எம்பாமிங் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்றும் மேலும் அவரது கால்கள் நீக்கப்பட்டன என்று பல சர்ச்சைகள் கிளம்பின.
இதற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், தற்போது அவரது பற்கள் நிக்கப்பட்டதாக சிலரும், அவரது வாய் தைக்கப்பட்டதாக சிலரும் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதா : வைரலாகும் காணொளி!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் மரணம் குறித்து இன்று வரையிலும் பல்வேறு மர்மங்கள் நீடித்துகொண்டிருக்கின்றன.
குறிப்பாக ஜெயலலிதாவின் உயிரிழப்புக்கு அவரின் நெருங்கிய தோழியான சசிகலாவே காரணம் எனவும், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார், அவரின் கால்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதற்கு வைத்தியசாலை உள்ளிட்ட தரப்புகள் மறுப்பு வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதாவின் முகத்தில் காணப்பட்ட புள்ளிகளும் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில், அவரின் கால்கள் அகற்றப்பட்டுள்ளது போன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.