தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு திருமங்கலம் அருகே கட்டப்பட்டு வரும் கோவிலை எதிர்வரும் 30ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஜெயலலிதா பேரவை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
அங்கு 4 திசைகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மைய பகுதியில் வெண்கலத்திலான ஜெயலலிதா முழு உருவ சிலை நிறுவப்படுகிறது. மேலும், தியான மண்டபம், கலையரங்கம், மாணவர்களுக்கான பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 30ஆம் திகதி திறந்து வைக்கிறார்கள்.
இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி : மாலைமலர்