சிறுமியை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல 1 1/2 மணி நேரத்திற்கும் மேலாக எடுத் துள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வழங்கிய அறிக்கைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களின் படி இது தெரியவந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிவானால் சுட்டிக்காட்டப்பட்டது.
—————-
வீட்டின் உரிமையாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார்
———
குறித்த சிறுமியின் மரணம் ஒரு தனி மரணம் அல்ல என்றும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் ஒப்புதலுடன் இடம்பெற்றுள்ளது
———-
06 சி.சி.டி.வி செயலற்ற நிலையில் இருந்தன மற்றும் நீக்கப்பட்ட காட்சிகளை மீட்டெடுக்க இயந்திரங்களின் தரவு மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமி உயிரிழக்க முன்னர் தாக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பிரேதப் பரிசோ தனை குறித்த விடயம் எதையும் கவனம் செலுத்தப்படவில்லை என்றும் சட்டமா அதிபர் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
மேற்படி சம்பவம் குறித்து விசாரிக்க ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர், தரகர் ஆகியோரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு மேல் நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதிவான் ரஜிந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உடல் தற்போது டயகம பகுதியில் அமைந்துள்ள கல்லறையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மனுத்தாக்கல் செய்தமைக்கு மேல் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சிறுமியின் சடலத்தை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள மூத்த தடயவியல் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மேல் நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, முதல் சந்தேக நபரான தரகர் குறித்த சிறுமியை ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிய அழைத்துச் சென்றமைக்காக அதிக பணம் சம்பாதித்ததாகவும், இரண்டாவது சந்தேக நபர் ரிஷாத்தின் மனைவியின் தந்தை, குறித்த சிறுமி தீ வைத்துக்கொண்டமை தொடர்பான தகவல்களை மறைத்து வைத்த தாகவும் விசாரணை மூலம் அறிக்கையில் தெரியவந்துள்ளமையால் குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக மேல் நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 15-20 நிமிட நேரத்தினுள் பாதிப்புற்ற சிறுமியை வைத்தியசாலையில் அனு மதிக்க வாய்ப்பு இருந்தபோதிலும், அச்சிறுமியை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல 1 1/2 மணி நேரத்திற்கும் மேலாக எடுத் துள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வழங்கிய அறிக்கைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களின் படி இது தெரியவந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிவானால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபரான ரிஷாத்தின் மனைவியின் தந்தை மற்றும் ரிஷாத்தின் மைத்துனர் ஆகியோர் டயகம சிறுமியின் மரணம் குறித்த சம்பவத்தை மூடி மறைக்க முயல்வதாகவும், குறித்த சிறுமியின் மரணம் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பான சிக்கலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில் பிணை வழங்குவதன் மூலம் சமூகத்தில் ஓரளவு அதிகாரம் உள்ள சந்தேக நபர்கள் என்றும், குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளாமல் இருக்க தடையை ஏற்படுத்தவும், சாட்சிகளை மூடி மறைக்க அந்த இடம் போதுமாக இருக்கும் என மேல் நீதவான் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
டயகம சிறுமி மரண சம்பவத்தில் தற்போது கிடைத்துள்ள ஆதாரங் களின்படி, வீட்டின் உரிமையாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என்றும், குறித்த சிறுமியின் மரணம் ஒரு தனி மரணம் அல்ல என்றும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் ஒப்புதலுடன் இடம்பெற்றுள்ளது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குறித்த சிறுமி ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த எட்டு மாத காலத்தில் அவரது தாயும் தந்தையும் மூன்று முறை டயகமவிலிருந்து ரிஷாத் வீட்டுகுச் சென்றுள்ளனர் என்றும், சந்தேக நபர்கள் ஒரு முறையேனும் குறித்த சிறுமியைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும், சிறுமி உயிரிழப்பதற்கு முன்னர் தாக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் இவ் விடயம் எதுவும் கவனம் செலுத் தப்பட வில்லை என்றும் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் 8 சி.சி.டி.வி கெமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. அதில் 06 சி.சி.டி.வி செயலற்ற நிலையில் இருந்தன மற்றும் நீக்கப்பட்ட காட்சிகளை மீட்டெடுக்க இயந்திரங்களின் தரவு மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவற்றை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அனுமதி கேட்டுள்ளார் .
இந்நிலையில் இதற்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி கடந்த 8 மாத காலங்களாகப் பணியாற்றிய நிலையில் கடந்த 03 ஆம் திகதி காலை 6.45 மணியளவில் தீக்காயங்களுக்குள்ளானர்.
ஆனால் அம்புலன்ஸ் வண்டி காலை 8.30 மணிக்கு வந்து மருத்து வமனைக்கு கொண்டு சென்றது என்றும், அது வரை நேரமும் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
ஒரு மிருகத்துக்குக் கூட வழங்கப்படாத இருண்ட அறையே சிறுமி தங்க வழங்கப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குறித்த சிறுமியின் தீ விபத்து சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய ஆதாரங்களில் வலுவான முரண்பாடு இருப்பதாகவும், குறித்த சிறுமியின் மரணம் குறித்த முறையான விசாரணை சட்டமா அதிபரின் தலையீடு மற்றும் மேற்பார்வையின் பின்னர் தான் தொடங்கப்பட்டதாகவும் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
சிறுமி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பதியுதீனின் வீட்டில் பணியிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ரிஷாத்தின் மைத்துனரைப் பார்க்கச் சென்றபோது “நாங்கள் அவளை வேண்டும்மென்றே எரிக்கவில்லை, ஏதோ தவறு நடக்கிறது” என்றும், இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நாங்கள் அதைப் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் ரிஷாத்தின் மனைவியின் தந்தை டயகம சிறுமியை 18 வயது சிங்களப் பெண்ணாக மருத்து வமனையில் அனுமதித்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்