பேருந்தில் பெண் காவலரை டிக்கெட் எடுக்க வலியுறுத்திய பெண் நடத்துனரை குறித்த காவலர் சரமாரியாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் அமர்ந்திருந்த பெண் காவலரிடம், பேருந்து பயணத்துக்கான 15 ரூபாய் டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்குபடி பெண் நடத்துனர் கேட்டுள்ளார்.
ஆனால், அரசு ஊழியரான நான் இலவசமாக தான் பயணம் செய்வேன் என காவலர் கூறியுள்ளார்.இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட சண்டையாக மாறியுள்ளது.
முதலில் நடத்துனர், காவலரின் தோளில் கை வைத்து தள்ளினார் இதனால் ஆத்திரமடைந்த காவலர், நடத்துனரை சரமாரியாக அடித்தார். சம்பவத்தை சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்து காவலர் மீது பெண் நடத்துனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.