சீமான் தமிழக முதல்வராக வந்து.. தமிழகத்தை ஆட்சி செய்ய போகிறாராம்!? பொது அரங்கில் இப்படி பேசுகிறார்கள் என்றால் வீட்டில் இவர்கள் எப்படி பேசுவார்கள்??
பண்பாடாக, மரியாதையாக எப்படி பேசுவது என்பதை செந்தமிழன் சீமானிடமிருந்துதான் தமிழக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விவாதத்தின் போது “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் கூற அப்போது அருணணுக்கும் சீமானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேசினார். தொலைக்காட்சி விவாதங்கள் இப்போதைக்கு லூசு என்ற வார்த்தையில் முடிந்திருக்கிறது.
(விவாதம் நடைபெற்றுகொண்டிருக்கும் போது நிறைய மோசமான வார்த்தைகளை சீமான் அள்ளிக்கொட்டுகிறார். அவற்றை தினதந்தி தொலைக்காட்சியினர் தடைசெய்தள்ளதை காணுங்கள்…. சீமான் பேசியதை முழுமையாக ஒளிபரபினால் நாடுதாங்காது)
“பறநாய்” என தமிழக எழுத்தாளர் ஒருவரை இலங்கையை சேர்ந்த (சுவிஸில் வாழும்) ஊடகவியளார் ஒருவர் திட்டி முகநூலில் பேசியயைிட்டு, யாழ்பாணத்தார் சாதி திமிர் பிடித்து பேசுகிறார்கள் என துள்ளிக்குதித்தவர்கள் சீமானின் இந்த பேச்சைக் கேட்டு என்ன சொல்லப்போகிறார்கள்?
தமிழ் சினிமாவில்... “பண்ணிக்கு பிறந்தவன், நாய்க்கு பிறந்தவன், எருமைக்கு பிறந்தவன்” என.. பல கெட்ட வார்த்தைகளால் கௌண்டமணி திட்டும் போது, வராத மானம், ரோசம் எல்லாம் “பறைநாய்” என திட்டிய போது மட்டும் இவர்களுக்கு ஏன் கோபம் வந்தது என்று தெரியவில்லை??
“பறைநாய்” என்று யாராவது அந்தச் சாதியை குறித்து திட்டுவதாக இருந்தால் அது தவிர்க்கப்படவேண்டியதே.
ஆனால்.. குறிப்பாக யாழ்பாணத் தமிழர்கள் “பறைநாயே” , “நாய்வீட்டு நாயே” என யாரையாவது திட்டுவது சாதி வெறியில் திட்டுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அது ஒரு பேச்சு வழக்காக இலங்கை தமிழர்களிடையே பழகிப்போனதால்தான் அப்படி பேசுகிறார்கள்.
தன்னுடைய சொந்தப் பிள்ளையையே “பறைநாயே” , “நாய்வீட்டு நாயே” என சிலபேர் கோபத்தில் பேசுவதை கவனித்திருப்பீாகள்.
நாயை தான் அவர்கள் மறைமுகமாக திட்டுகிறார்கள் என்றுதான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும.
நன்றியுள்ள நாயோடு தமிழனுக்கு என்ன கோபம் என்றுதான் தெரியவில்லை?
தமிழ் சினமா படங்களில் டேய், பரதேசி, பண்ணாடை … என்று படுமோசமான வசனங்களில் பேசுகிறார்கள். இதைதானே இன்று இளைய சமுதாயம் பின்பற்றுகிறது.
இதை யாரும் ஏன தட்டிக்கேட்பதில்லை??