டொரண்டோவில் உள்ள York University என்ற பல்கலைக்கழகத்தில் நேற்று அடையாள தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு அப்பாவி மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் டொரண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Annie Malik மற்றும் Namra Malik, ஆகிய இருவர் நேற்று York University பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் வந்து இருவரையும் சுட்டதாகவும், அதில் Annie Malik என்பவருக்கு இடது காலிலும், Namra Malik என்பவரது கையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
காயம் அடைந்த இருவரும் டொரண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், அதில் ஒருவர் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார் என்றும் பல்கலைக்கழக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
துப்பாக்கியால் சுடப்படும்போது இருவரும் சமயோசிதமாக டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொண்டதால் உயிருக்கு ஆபத்தின்றி தப்பித்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். குற்றவாளியை பிடிக்க டொரண்டோ போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.