ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திரக்கட்சிலிருந்து நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார்.
தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்த இதனைத் தெரிவித்தார்.
எனது பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்தவரின் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் ஒரு சொப்பின் பையொன்றை தான் மீட்க முடிந்துள்ளது.
ஆனால், அங்கிருந்த கல்லறையொன்றும் தோண்டப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும். நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தை தோண்டுவது வழமையாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலமாக்கியவன் நான். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்த பெருமையும் என்னையே சாரும். எனவே, கட்சிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் விரும்பமாக இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாட்டு ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன. இந்நிலையில் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன.
நாமல், பசிலுடன் நானும் விரைவில் கைது – என்கிறார் மகிந்த
தனது மற்றொரு மகன் நாமல், சகோதரர் பசில் ஆகியோருடன் தானும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
கண்டியில் தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடு செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச-
“நானும் கூட விரைவில் கைது செய்யப்படவுள்ளேன். என்னுடன், மகன் நால் ராஜபக்ச, சகோதரர் பசில் ராஜபக்ச, விமல் வீரவன்ச, குமார வெல்கம, ரோகித அபேகுணவர்த்தன ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பலரும் என்னை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சித்தாலும், கூட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை.
புதிய அரசியல் கட்சியைத் உருவாக்குவது மக்களின் முன்னுரிமையாக இருந்தாலும், நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.