இன்றைய காலக்கட்டங்களில் குடிநீரை சேமிக்காமல் அதற்கு அவதிப்பட்டு வருகிறோம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நீரின்றி தவித்த வருகின்றன. இதனால் தண்ணீரை சேமித்த குரங்கின் வீடியோ வலைதளத்தில் வைராகியுள்ளது.
குரங்கு ஒன்று குழாயில் தண்ணீரை குடித்துவிட்டு, அவை வீணாக கூடாது என்று குடித்து முடித்த பின் மூடிவிட்டும் இறங்கி செல்கிறது.
இந்த வீடியோ காட்சி முதன் முதலில் டிக்டாக்கில் தான் வெளியாகிருந்தது. அந்த விடியோவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய் குரேஷி ட்விட்டரில், “மனிதர்களுக்கு என்ன ஒரு அழகான பாடம் இது!” என்று அந்த 11 செகண்ட் வீடியோவை பதிவிட்டார்.
What a beautiful message for humans! pic.twitter.com/wTgK4b9uGF
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) August 1, 2019