இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியும் கட்சியின் நீண்ட கால உறுப்பினருமான கே.வி.தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டமானது நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போதே புதிய தெரிவுகள் இடம்பெற்றன.
இதன்படி செயலாளராக சீ.ஆர் னோல்ட் பிரியந்தன், பொருளாளராக பத்மினி சதானந்தன், உப தலைவராக க.சிங்காரநாதன் மற் றும் மிதிலா ஸ்ரீபத்மநாதன், உப செயலாளராக க.மகாதேவா, உப பொருளாளராக ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று உறுப்பினர்களாக சி.இரத்தினவடிவேல், க.மகாதேவா, ரகு பாலசந்திரன், நா.தணிகாசலம்பிள்ளை, சரோஜினி சிங்காரநாதன், சி.கந்தசாமி, க.நித்தியானந்தன், ஆர்.ஜெயசீலன், ஜ.பாலசுப்பிரமணியம், கு.ஸ்ரீதர், எம்.தேவராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.