பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையில் தமிழர் என்ற பதமே இல்லை. அத்தகைய பிரேரணையொன்றையே எம்மீது திணிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இதற்கு சில தமிழ்தரப்புக்களும் ப+ரண ஒத்துழைப்புக்களை வழங்கி துணைபோகின்றன என தமிழர் இயக்கத்தின் சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை வகிக்கும் ருமேனியா, தென் ஆபிரிக்கா மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஒக்டோபர் மாதம் பொஸ்வெல்லில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான கூட்டம் நiபெற்றிருந்தது. இதன்போது, இலங்கை தொடர்பில் பிரித்தானியா தலைமை தாங்கி கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அந்த முன்மொழிவுகளில் இருந்த விடயத்தில் ஒரு விடயம் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சி என்ற விடயம் மட்டுமே இல்லாதுள்ளது. ஏனைய விடயங்கள் அவ்வாறே தற்போது முன்மொழியப்பட்டுள்ளன.
முன்னதாக சர்வதேச நாடுகள் இலங்கையில் தீவிரவாதத்தினை ஒழித்தமைக்காக இலங்கையை பாராட்டி தீர்மானத்தினை நிறைவேற்றியிருந்தன.பின்னர் இலங்கைக்கு அழுத்தமளிக்கும் வகையில் தீர்மானங்கள் இருந்தன. பின்னர் 30/1மற்றும் 34/1போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களில் தமிழ் அல்லது தமிழர் என்ற சொற்பிரயோகங்கள் எங்கும் இருந்திருக்கவில்லை. இதன் காரணத்தால் தான் இலங்கை அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கியிருந்தது. தற்போதைய பிரேரணையிலும் அவ்வாறான பதமில்லாது தான் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.
அதேநேரம், இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூறுவதற்காக கால அவகாசம் வழங்கப்படுகின்றது. இதனால் இலங்கை விடயங்கள் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டு முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
20 இற்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பதை ஏற்று அது பற்றி கருத்துக்களை முன்வைத்தன.
தற்போது அந்த நிலைமைகள் மாற்றமடைந்து இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள காணமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறுகின்றன. இலங்கையில் இனமொன்று உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது என்பதை மறந்து தீவிரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடைபெற்றது என்று பிரஸ்தாபிக்கும் அளவிற்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன.
இந்த நிலையில் தான் நாங்கள் உறுப்பு நாடுகளைச் சந்திக்கின்றபோது, பல்வேறு சான்றுகளை முன்வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கருத்துக்களை வெளியிடுகின்றோம்.
ஆனால், அந்த நாடுகளினால் தற்போது கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு தமிழ்த் தரப்புக்களே ஆதரவளித்து அதனை நிறைவேற்றுவதற்கு உந்துதலளிக்க வேண்டும் என்று தம்மைக் கூறுவதாக எம்மிடத்தில் கூறுகின்றன
குறிப்பாக நாம் இறுதியாக சந்தித்த ருமெனியா, தென்னாபிரிக்கா, எசிடோனியா ஆகிய நாடுகள் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளன. குறிப்பான தென்னாபிரிக்கா பிரதிநிதி, பிரித்தானியாவே பிரேரணையை முன்மொழிகின்றது.
அதில் உள்ள முன்மொழிவுகளை நாங்கள் ஆதரிக்கின்றோம். தமிழர்களுக்கு அதிருப்திகள் காணப்பட்டால் தலைமையகத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தொடர்புகளை ஏற்படுத்தி தருகின்றோம் என்று கூறினார்.
ரோஹிங்கியாவில் மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றிருக்கின்றது விசாரணை தேவை என்று கூறப்படும் அளவிற்கு நிலைமைகள் இருக்கின்ற போதும் இலங்கை விடயங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டு செல்கின்றன என்றார்.