இனி ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம்!
இலங்கையில் இனி ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் இனி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்றும்,
சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் பண்டார, “இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் தானே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.