“விடுதலைப் புலிகளை இலங்கை அரசு முழுமையாக தோற்கடித்து விட்டது. இப்போது விடுதலைப் புலிகள் என்று யாரும் கிடையாது. ஆனால், ‘சருகுப்புலிகளை’ நடமாட்டம் உள்ளது” என்று கூறிய, இலங்கை வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மீது குபீரென பாய்ந்துள்ளார், ஆதித்தன் மாஸ்டர்.
விடுதலைப் புலிகள் வெளிநாட்டு பிரிவுகளில் ஒன்றான ‘நெடியவன் படையணியின்’ செய்தித் தொடர்பாளராக உள்ளார், ஆதித்தன் மாஸ்டர்.
“ஈழ விடுதலைக்காக வெளிநாடுகளில் பயிற்சி பெற்று சிங்கள ராணுவம் மீது பாய தயாராகவுள்ள நாம் சருகுப்புலியா? அல்லது, விடுதலைப் புலிகளின் தயவில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் பதவி பெற்றுள்ள ஐங்கரநேசன் சருகுப்புலியா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் மாஸ்டர்.
“வெளிநாட்டுப் புலிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்ற மமதையில் பேசியுள்ளார், சருகுப்புலி ஐங்கரநேசன். அவரது எண்ணம் ஈடேறாது.
தற்போது வெளிநாடுகளில் பாய தயாராகவுள்ள தேசியத் தலைவர் தலைமையிலான படையணியும், பிரிகேடியர் நெடியவன் தலைமையிலான படையணியும் ஒன்றிணைந்து, களம் காண ஈழம் வருகையில், ஐங்கரநேசன் என்ற சருகு, கருகும். அதை தமிழ் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்” என்றும் கூறியுள்ளார், வெளிநாட்டு புலி ஆதித்தன் மாஸ்டர்.
சரி, மாஸ்டர்… நம்ம நெடியவன் எப்போது பிரிகேடியர் ஆனார்?