பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் தலைகீழாக தலை அமைந்த ஒரே மனிதர் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு நார்மலாக எல்லோருக்கும் இருப்பது போல் தலை இல்லாமல் தலைகீழாக் இருக்கின்றது.
அதுமட்டுமின்றி இவருடைய கால்கள் வித்தியாசமான கோணத்திலும், கை மற்றும் தோள்கள் மிகவும் குறுகியும் அமைந்துள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த Claudio Vieira de Oliveira என்பவர் பிறக்கும்போதே congenital arthogryposis, என்ற குறைபாட்டுடன் பிறந்ததால், அவருடைய உடல் உறுப்புகள் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது.
இவர் பிறந்தவுடன் ஒருசில நாட்களில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் இவருடைய தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனால் இவருடைய தாயார் நம்பிக்கையுடன் தனது மகனை வளர்த்து தற்போது நார்மலான ஒரு மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இவர் தானே செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இவருக்கு தேவையானவற்றை இவரே செய்துகொள்வது மட்டுமில்லாமல் கணிதவியலில் இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அதுமட்டுமின்றி மேடைப்பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
நான் ஒரு நார்மலான மனிதன் தான் என்றும், என்னை யாரும் வித்தியாசமாக பார்த்து என்மேல் இரக்கப்படவேண்டாம் என்றும், அவர் பொதுமக்களையும் பத்திரிகையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.