பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி ரஹ்மான் மாலிக் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தேசியசபை உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் காலதாமதமாக வந்து விமானத்தில் ஏறியதால் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர்.
கராச்சி விமான நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அதில் சுமார் 250 பயணிகள் ஏறி அமர்ந்த நிலையில், அதில் பயணம் செய்யும் முன்னாள் மந்திரி மாலிக்கும், எம்.பி. ரமேஷ் குமாரும் வரவில்லை.
former interior minister Rehman Mali
அவர்களின் வருகைக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் புறப்படவில்லை.
மிகவும் தாமதமாக வந்த இருவரும் விமானத்தில் ஏற முயன்றபோது, ஆத்திரமடைந்த பயணிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்கள் ஒருவருக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமா? என்று கேட்டதுடன் மாலிக்கை மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.
நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகும், அவர்களை விமானத்தில் ஏற விடவில்லை. இதனால், அவர்கள் இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றது.
முன்னாள் மந்திரியுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோவில் ரமேஷ் குமாரும் இல்லை. ஆனால், அவரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று செய்தி வெளியானது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும், மாலிக்கிற்காக காத்திருக்கவில்லை என்றும் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் மசூத் தஜ்வார் விளக்கம் அளித்துள்ளார்.
காலதாமதம் தொடர்பாக பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.