என்ன கொடுமையடா? இவர்கள் மனிதர்களா? திருட்டு குற்றத்திற்காக …ஒருவரின் கையை வெட்டி அந்த படங்களை ‘ட்விட்டர்’ ( Twitter ) பிரசுரித்த சிரிய முஸ்லீம் தீவிரவாதிகள். திருட்டு குற்றவாளிக்கு தண்டணை கொடுப்பவாகள் குற்றம் எதுவும் செய்யாதவாகளா?
சிரியாவில் உள்ள முஸ்லீம் அமைப்பு ஒன்று விலை மதிப்புள்ள பொருட்களை திருடிய ஒரு திருடனின் கையை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி, அதை நேரடி ஒளிபரப்பாக டுவிட்டரில் வெளியிட்டனர். இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள Maskanah, near Aleppo, என்ற பகுதிகளில் செல்வாக்குடன் இருக்கும் (ISIS – Islamist State in Iraq and Syria) ஒரு முஸ்லீம் அமைப்பு, திருடுவதையே தொழிலாக கொண்ட ஒரு இளைஞனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கையை வெட்டும் தண்டனையை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கையை வெட்டும் சம்பவத்தை விதவிதமாக புகைப்படம் எடுத்து உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்ததோடு, இந்த சம்பவத்தை நேரடியாக டுவிட்டரிலும் ஒளிபரப்பி உள்ளனர். இதன் மூலம் சிரியாவில் திருட நினைக்கும் கும்பல்களுக்கு தாங்கள் கொடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என அவர்கள் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்த பயங்கரமான புகைப்படங்களை உடனடியாக டுவிட்டரில் இருந்து நீக்க பலர் டுவிட்டர் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் உடனடியாக இந்த அக்கவுண்ட்டை தேடி கண்டுபிடித்து நீக்க முடியவில்லை என்று டுவிட்டர் கூறினாலும் சிலமணி நேரங்களில் இந்த புகைப்படங்களை டுவிட்டர் அகற்றிவிட்டது.
ஆனாலும் அதற்குள் உலகின் பல இணையதளங்களில் இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.