ஈரானில் பல திருட்டுகளில் ஈடுபட்ட நபர் ஒருவரின் கைவிரல்களை அதிகாரிகள் துண்டித்தமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
மஜன்டாரன் மாகாணாத்தில் உள்ள சிறையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈரான் அதிகாரிகள் 28 திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவரின் விரல்களே துண்டிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
முதல் தடவை திருட்டுகளில் ஈடுபடுபவரின் கைவிரல்களை துண்டிக்கலாம் என ஈரானின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகநாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் ஈரான் அதனை நியாயப்படுத்தி வருகின்றது.
நபர் ஒருவரை திட்டமிட்டு உடல்பாகங்களை சிதைப்பது நீதி வழங்குவதாகது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இது மனித குலத்தின் கௌரவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ஈரானின் சட்டங்களில் மாற்றங்களை சர்வதேச சமூகம் கோரவேண்டும் என தெரிவித்துள்ளது.