மெக்சிக்கோவில் ஆறு குழந்தைகள்உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
மெக்சிக்கோவின் சொனொரா நகரில் வாழும் அமெரிக்காவைசேர்ந்த மோர்மொன் குடும்பத்தை சேர்ந்தவர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று கார்களில் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் மீது போதைப்பொருள் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் அது வெடித்துச்சிதறியது அதன் போது மூன்று தாய்மார்கள் ஆறு பிள்ளைகள் உட்படஒன்பது பேர் கொல்லப்பட்டனர் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாத இரட்டை குழந்தைகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று முதல்12 வயதானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஏழு மாத குழந்தை உயிருடன்மீட்கப்பட்டுள்ளது,ஏழு பிள்ளைகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் எனவும்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள்பயணம் செய்த வாகனம் முற்றாக எரியுண்ட நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில்வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட வாகனத்தை துப்பாக்கிரவைகள் துளைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை 13 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள உயிர் தப்பிய நபர் ஒருவர் ஆயுதங்களுடன்பலரை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.
மூன்று வாகனங்களில்சென்றவர்களின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது பிழையாக அடையாளப்படுத்தி எங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அவர்தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் போதைப்பொருள் யுத்தம் அதிகமாக இடம்பெறும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த பகுதியில் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதலில்ஈடுபடுவது வழமை.
இது படுகொலை என தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் ஒருவர் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைதனது உறவினரின்ஏழு பிள்ளைகள் நடுவீதியில்கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டனர் ஒருவர்முகநூலில்பதிவு செய்துள்ளார்.