ஊர் மக்களால் அவமதிக்கப்படுவோம் என எண்ணி அவர்கள் குஜராத் மாநிலத்திற்கு தப்பி சென்று குடும்பம் நடத்தி உள்ளனர்.
ஆனால் கிராம மக்கள் அவர்களுடைய இருப்பிடத்தை தேடிபிடித்து சென்று உள்ளனர், அவர்களை சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.
கிராம மக்கள், தம்பதியினரின் ஆடைகளை களைந்து அவமதித்து உள்ளனர்.
மேலும் நிர்வாணமாக அழைத்து சென்று உள்ளனர்.
கும்பலாக அவர்களை கொடூரமான முறையில் தாக்கிஉள்ளது, பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான கொடூரமான காணொளியானது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக யார் தரப்பில் இருந்தும் புகார் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக காவற்துறைக்கு தம்பதியினர் தகவல் தெரிவித்து விடாத வண்ணம் அவர்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளனர் என காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவற்துறையினர் பாதிக்கப்பட்ட தம்பதியின் பெற்றோர்கள் உள்பட 18 பேரை கைது செய்து உள்ளனர்.
கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் மற்றும் சட்டவிரோதமாக சிறையடைப்பு உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வலுக்கட்டாயமாக வேறு திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்ணையும் காவற்துறையினர் மீட்டு உள்ளனர்.
அவர்களின் வழக்கப்படி ரூ. 80 ஆயிரம் பெற்றுக்கொண்டு பெற்றோர்களே மற்றொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.
தம்பதியினர் மேளம் கொட்டி, நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட போது அவர்களுடைய பெற்றோர்களும் இருந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது பாதிக்கப்பட்ட ஜோடி காவற்துறை பாதுகாப்பில் உள்ளது, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாது.
நாளை பாதிக்கப்பட்ட ஜோடி நீதவான் முன்னிலையில் ஆஜராகி தங்களுடைய வாக்குமூலத்தை அளிக்கவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.