அமெரிக்காவில் யூட்டா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு கையில்லாத ஒரு இளைஞனை தீவிரவாதி என தவறாக நினைத்து சுட்டு கொன்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற ம் நிறைந்துள்ளது.
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் என்ற நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான போர்ன் குருஸ் என்பவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது மூன்று தீவிரவாதிகள் வீதியன் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அவர் உடனடியாக தன்னுடைய காரில் இருந்து இறங்கி மூவரையும் நோக்கி தன்னுடைய துப்பாக்கியை காண்பித்து உடனடியாக மூவரும் கைகளை மேலே தூக்கும்படி எச்சரித்தார்.
The shooting death of Taylor
பொலிஸ் அதிகாரியின் எச்சரிக்கைக்கு இருவர் உடனே கைகளை மேலே தூக்கினர். ஆனால் ஒருவர் மட்டும் கைகளை தூக்கவில்லை. அவர் தனது கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்ததாக நினைத்த காவல்துறை அதிகாரி உடனே அவரை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர் அருகே சென்று பார்த்தபோதுதான் அவர் இரண்டு கைகளும் இல்லாதவர் என்று தெரியவந்தது.