அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கிகியதுடன் குற்றவாளிக்கு சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 54 இலட்சம் ரூபா தண்டப் பணம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
இந்த தண்டப் பணத்தை அவர் செலுத்தத் தவறினால் மேலும் இரு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி ஏற்படும் எனவும் இதன்போது நீதிபதி அறிவித்தார்.