சென்னை: தமிழ்த் திரையுலகில் நேற்று பரவிய செய்தி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நிஜமா, உண்மையா என்றுதான் பலரும் கிசுகிசுத்துக் கொண்டனர். காரணம், அந்த இளம் தயாரிப்பாளர் – நடிகர் – அரசியல் குடும்பத்து வாரிசு தற்கொலைக்கு முயன்றதாக வந்த தகவலால்.
இத்தனைக்கும் அந்த இளம் நடிகர் திருமணமானவர், சந்தோஷமாக மனைவியுடன் குடும்பம் நடத்தி வருபவர். தந்தையுமானவர். ஆனால் தன்னுடன் 2வது படத்திலும் ஜோடி சேர்ந்த நடிகையுடன் ஏற்பட்ட காதல் முற்றி, அந்தக் காதலை அந்த நடிகை நிராகரிக்கப் போய் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் தற்கொலைக்கு இவர் முயன்றதாக அந்த பரபரப்புச் செய்திகள் கூறின.
இத்தனைக்கும் அந்த இளம் நடிகர் திருமணமானவர், சந்தோஷமாக மனைவியுடன் குடும்பம் நடத்தி வருபவர். தந்தையுமானவர். ஆனால் தன்னுடன் 2வது படத்திலும் ஜோடி சேர்ந்த நடிகையுடன் ஏற்பட்ட காதல் முற்றி, அந்தக் காதலை அந்த நடிகை நிராகரிக்கப் போய் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் தற்கொலைக்கு இவர் முயன்றதாக அந்த பரபரப்புச் செய்திகள் கூறின.
இந்த செய்தியை ஒரு முன்னணி நாளிதழ் செய்தியாக வெளியிடப் போய் பரபரப்பு பற்றிக் கொண்டு விட்டது.சிங்கம் நடிகர் படத்திலிருந்து
இந்த இளம் நடிகர் சிங்கம் நடிகரை வைத்துத் தயாரித்த படத்தில்தான் அந்த நடிகை இவருக்கு அறிமுகமானார். அப்போதே நடிகை மீது நடிகருக்கு ஒரு இது வந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நடிகைக்கு அது வந்ததா என்பது தெரியவில்லை.
மறுபடியும்
இந்த நிலையில் தானே கதாநாயகனாக அவதாரம் எடுத்தார் நடிகர். மேலும் தனது புதிய படத்திலும் தனக்குப் பிடித்த நடிகையை அவர் ஜோடியாகவும் போட்டார். காதலை வளர்க்கவும், ஆழப்படுத்தவும்தான் இந்த முயற்சி என்று பேசிக் கொள்கிறார்கள்.
மலைக்கோவில் வாசலில்
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் வளர, நடிகை மீதான நடிகரின் காதலும் மறுபக்கம் விறுவிறுவென வளர்ந்து வந்ததாம். இருவரும் படப்பிடிப்புக்கு மத்தியில் பழனிக்கெல்லாம் போய் சாமி கும்பிட்டு வந்தார்களாம்..
மலைக்கோவில் வாசலில்
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் வளர, நடிகை மீதான நடிகரின் காதலும் மறுபக்கம் விறுவிறுவென வளர்ந்து வந்ததாம். இருவரும் படப்பிடிப்புக்கு மத்தியில் பழனிக்கெல்லாம் போய் சாமி கும்பிட்டு வந்தார்களாம்..
என்னப்பா இது
ஆனால் இந்த விஷயத்தை நடிகரின் குடும்பத்தார் ரசிக்கவில்லை. விஷயம், குடும்பத்துப் பெரியவர் காதுகளுக்குப் போக அவர் நடிகரை கூப்பிட்டு என்னப்பா இது, இதெல்லாம் வேண்டாம், விட்டுரு என்று அறிவுரை கூறினாராம்.
ஆனால் இந்த விஷயத்தை நடிகரின் குடும்பத்தார் ரசிக்கவில்லை. விஷயம், குடும்பத்துப் பெரியவர் காதுகளுக்குப் போக அவர் நடிகரை கூப்பிட்டு என்னப்பா இது, இதெல்லாம் வேண்டாம், விட்டுரு என்று அறிவுரை கூறினாராம்.
விடாத காதல்
ஆனால் அதை அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விட்டு விட்டாராம் நடிகர் – காரணம் காதல் முற்றியதால், காதில் எதுவும் ஏறவில்லையாம். மறுபடியும் தனது புதுப் படத்தில் நடிகையை ஜோடியாக்கியுள்ளார்.
ஆனால் அதை அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விட்டு விட்டாராம் நடிகர் – காரணம் காதல் முற்றியதால், காதில் எதுவும் ஏறவில்லையாம். மறுபடியும் தனது புதுப் படத்தில் நடிகையை ஜோடியாக்கியுள்ளார்.
சுதாரித்த நடிகை
ஆனால் இப்போது நடிகை சுதாரித்துக் கொண்டாராம். எனக்கு உங்கள் மீது நட்பு மட்டுமே, காதல் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறவே கண்ணாடி மீது பட்ட கல்லாக நடிகரின் மனது உடைந்து போய் விட்டதாம்.
சோகத்தில்
இந்த சோகத்தில்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது நண்பர் நடிகர் ஒருவர்தான் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறுகிறார்கள்.