அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும். 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,948 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நாளொன்றில் 4000 இற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கையும் இவ்வாறு 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் சுமார் 12 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 400 இற்கும் அதிக மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை இன்று இரவு 10 மணிவரை 4,472 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய இது வரையில் 4077 57 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 348 930 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 49 995 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.