பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு , அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவெளியிட்டனர் ஜோடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் அவ்விருவரும் ஆஜராகியிருந்தனர். இதன் போதே, தலா 10 ஆயிரத்து 800 ரூபாவும் நான்கு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்அறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
மஹரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்விருவரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அத்துடன் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.